அரியலூர் மாவட்டம் கோப்பிலியன் குடிக்காடு கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நாள்தோறும் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் வெளியே செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். இந்த தெருநாய்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பொதுமக்களை கடிக்க பாய்வதால் பயத்துடன் வெளியே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.