மண்புழு தயாரிக்கும் கூடத்தை சீரமைக்க கோரிக்கை

Update: 2026-02-01 11:13 GMT

கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் ஊராட்சி நடையனூரில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிப்பதற்கு கொட்டகை மற்றும் கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டது. இவை கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பயன்பாடற்று கிடக்கிறது. மேலும், கொட்டகை மற்றும் கான்கிரீட் தொட்டிகள் சிதிலமடைந்துள்ளன. எனவே அவற்றை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்