ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி ஊராட்சிக்குட்பட்ட இருசனாம்பட்டி அருந்ததியர் தெருவில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இது முறையாக பராமரிக்கப்படாததால் பயன்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதனை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.