கரூர் மாவட்டம் வெங்கமேடு, முனியப்பன் கோவில் தெரு, என்.எஸ் கேநகர், வாங்கப்பாளையம், தங்க நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை துரத்தி செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கோழிகளை கடித்து குதறுகின்றன. இதனால் கோழி வளர்ப்பவர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.