வாகன ஓட்டிகளை திணறடிக்கும் தெருநாய்கள்

Update: 2026-01-18 10:40 GMT

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வளைவு பகுதியானது மிகவும் ஆபத்தான பகுதியில் ஒன்றாக உள்ளது. இப்பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் பலரும் வாகனத்தை திருப்பும்போது சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்