கோத்தகிரி மார்க்கெட் திடல் அருகே பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க நடை மேம்பாலம் உள்ளது. கடந்த ஆண்டு மழையின் காரணமாக ராட்சத மரம் சரிந்து மேம்பாலத்தின் மீது விழுந்தது. இதனால் பாலம் சேதமடைந்தது. ஆனால் இதுவரை சீரமைப்பு செய்யப்படாததால் பள்ளி குழந்தைகள் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அந்த நடை மேம்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.