ஈரோடு திரு.வி.க. ரோடு கல்யாண விநாயகர் கோவில் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் கடிக்க துரத்தி வருகின்றன. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.