கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள அரவேனு பஜாரில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மழை, வெயிலில் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.