திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். என். புதூர் கிராமத்தில் கடந்த 2023-24 ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.25 லட்சத்தில் அப்பகுதி பொதுமக்களின் வசதிக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கழிவறைகளுடன் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, தண்ணீர் குழாய் அமைப்புகளுடன் கட்டப்பட்ட சுகாதார வளாகம் கடந்த 2 ஆண்டுகளாக திறப்பு விழா காணாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.