அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் இருந்து கும்பகோணம் பகுதிக்கு தினம்தோறும் கல்லூரி மாணவர்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வழித்தடத்தில் சரியான நேரத்திற்கு தொடர்ந்து பஸ் வசதி இல்லாததால், பொதுமக்களும், மாணவர்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விக்கிரமங்கலத்தில் இருந்து ஸ்ரீபுரந்தான் வழியாக கும்பகோணத்திற்கு நகரப் பேருந்துகள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.