அரியலூர்-திருச்சி சாலை மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையில் போதுமான அளவில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் அதிகளவில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சாலையின் குறுக்கே தெருநாய்கள் சென்றால் அதனை இரவில் கண்டறிவதும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக போதுமான அளவில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.