கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி செளுக்காடி அருகில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.