மதுரை வார்டு 19, கூடல்நகர் பகுதி சாந்தி நகர், பொதிகை நகர் 7-வது தெருவில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. அச்சமயம் சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் துரத்தி சென்று கடித்து குதறுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?