குத்தாலம் பகுதியில் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரை செல்லும் சாலையையும், காளி திருமங்கலம் செல்லும் சாலையை இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. பாலத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச்சுவர்கள் முழுவதும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பாலத்தின் வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.