கோத்தகிரி அருகே கேர்பெட்டா கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கருஞ்சிறுத்தைகள் மற்றும் சிறுத்தைகள் தொடர்ந்து இரவு நேரத்தில் உலா வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.