ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் கல்யாண விநாயகர் கோவில் அருகே தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் கடிக்க துரத்துகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?