மதுரை பழங்காநத்தத்தை அடுத்த வசந்தம் நகர்-காளவாசல் பைபாஸ் சாலை இடையே உள்ள பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் சில இடங்களில் கம்பிகள் முழுவதுமாக இன்றி காட்சியளிக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் அப்பாலத்தில பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பாலத்தை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.