மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2025-10-19 12:58 GMT

அரியலூர் புறவழிச்சாலையில் அம்மாக்குளம் பிரிவு சாலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழே அமர்ந்து மதுப்பிரியர்கள் பலரும் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டுச்செல்கின்றனர். மேலும், சர்வீஸ் சாலையோரம் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளில் அமர்ந்து இரவு நேரங்களில் பலரும் மது அருந்திவிட்டு குப்பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் சாலைகளின் நடுவே வீசிச்செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அதிகளவில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்