திருச்சி மாவட்டம் ஜங்ஷன் ரவுண்டானா பகுதியில் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதி குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.