செஞ்சி காந்தி கடைவீதியில் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்தாமல் அவர்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.