விரட்டி கடிக்கும் நாய்கள்

Update: 2025-09-28 17:49 GMT

திருப்பூர் வளர்மதி பாலத்தில் இருந்து ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் கரையோரம் முத்துச்சாமி செட்டியார் சாலை உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகனப்போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும். இங்குள்ள ஈஸ்வரன் கோவி லின் அருகே கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி வருகின்றது. இவை வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சுடிதார், சேைல கட்டிக்கொண்டு வாகனத்தில் செல்லும் பெண்களை கவ்வி மேலே பாய்கிறது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்