சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் ஆபத்தை உணராமல் சில வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகள், சாலையை கடக்க காத்து நிற்கும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவேகத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.