கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சிமுனைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் போதுமான அளவு இல்லை. இதனால் அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த காட்சிமுனை பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.