ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் பன்றிகள்

Update: 2025-09-21 11:34 GMT

அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அரியலூர் மட்டுமின்றி பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் ரெயிலில் பயணிப்பதற்காக இரவு நேரங்களிலும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் அதிகளவில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. ஏற்கனவே தெருநாய்கள் தொல்லை அதிகளவில் இருந்து வரும் நிலையில், தற்போது பன்றிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களும், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பன்றிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்