அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் பயணிகள் நிற்பதற்கு போதுமான அளவில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்துநிற்கும் பயணிகள் மழைக்காலங்களிலும், கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு போதுமான அளவில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.