சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள முக்கிய சாலைகளில் ஆபத்தை உணராமல் சிலர் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் அச்சமடைவதோடு, சிலர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.