மதுரை நகர் சிக்கந்தர் சாவடி அடுத்த பொதும்பு மற்றும் அதலை செல்லும் சாலையில் திருப்பத்தில் ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் ஊருக்குள் செல்லும் பாதை தெரியாமல் மிகவும் சிரமம் அடைவதோடு சிலர் அதனை கடந்து தொலை தூரம் சென்று விடுகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட ஊர்களுக்குள் செல்லும் சாலையின் திருப்பத்தில் பெயர் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.