தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-24 14:20 GMT

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்