பயணிகள் அவதி

Update: 2025-08-03 12:58 GMT

அரியலூர் ஒன்றியம் கோப்பிலியங்குடி காடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து கள்ளங்குறிச்சி வழியாக அரியலூர் செல்லும் சாலையில் கடுகூர் பிரிவு சாலை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்ததால் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. ஆனால் புதிய நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்