சீதப்பாலில் அரசு தொடக்கப்பள்ளில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடத்தின் பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வண்ணம் உள்ளது. மேலும், மழை காலங்களில் நீர்கசிவும் ஏற்படுகின்றன. இதனால், பெற்றோர்கள் அச்சத்துடனே பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டுவந்து விடும் நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆராய்ந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மயில்.கார்த்திகேயன், சீதப்பால்.