மதுரை ஓபுளாபடித்துறை சாலை அருகில் மாநகராட்சி ஆஸ்பத்திரி பகுதியில் அதிகம் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் அரசு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இச்சாலையில் போதிய அளவில் வேகத்தடைகள் இல்லை. இதனால் சாலையை கடக்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே பொதுமக்கள் சிரமத்தை போக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் அப்பகுதியில் கூடுதல் வேகத்தடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.