மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவஹா் நகர் நான்காவது தெரு மற்றும் ரவுண்டானா பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் தெருநாய்கள் சாலையில் நடந்து செல்வோரை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?