திருச்சி மாவட்டம் தில்லைநகர் வடகிழக்குப்பிரிவில், முதலாவது குறுக்குச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு எதிரே கோட்டை ரெயில் நிலையம் உள்ளது. அங்கு ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து காடுகோல் காட்சி அளிக்கும் நிலையில், விஷ ஜந்துக்களின் உறைவிடமாக உள்ளது. விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி ரெயில் நிலையத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.