சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி சன்னதி தெருவில் இரவு நேரங்களில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை கடிக்க முயற்சிப்பதுமாக இருக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருமைதங்கம், மணவாளக்குறிச்சி.