திருச்சி தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் தங்களது உறவினர்களின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கி செல்கின்றனர். இதில் சான்றிதழ்களில் பிழைதிருத்தம் இருந்தாலோ அல்லது பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிடும்போது, சான்றிதழில் உள்ள பிழையை சரிசெய்து கொடுக்காமல் மக்களை அலைகழித்து வருகின்றனர். இதனால் ஏழை மக்கள் தங்களின் அன்றாட பிழைப்பை விட்டுவிட்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.