ஒட்டன்சத்திரம் தாலுகா சிந்தலவாடம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள சுகாதார வளாக கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுகாதார வளாக கட்டிடத்தை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.