வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் உள்ள மதில்சுவர் உடைந்துள்ளது. இதனால் அதன் வழியாக குப்பைகளும், கழிவுநீரும் குளத்துக்குள் சென்று சேர்வதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் தெப்பக்குளத்தில் குளிக்கும் பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே சேதமடைந்த தெப்பக்குள மதில் சுவரை சீரமைத்து, தெப்பக்குளத்தை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.