விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் கொசுத்தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.