சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகர் பகுதியில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில வசிக்கும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் முதியோர்கள் ஆகியோர் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.