ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும்

Update: 2025-06-29 11:43 GMT

அரியலூர் மாவட்டம் கீழநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கி ஒப்பந்ததாரர்கள் மூலம் இப்பகுதிகளில் உள்ள ஒரு சில ஏரிகளை தூர்வாரி வருகிறது. இந்த ஏரிகள் சரியாக ஆழப்படுத்தப்படாமலும், கரைகள் முறையாக பலப்படுத்தப்படாமலும் பெயரளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏரிகளில் எடுக்கப்படும் மண்ணை அதிக விலைக்கு விற்பனையும் செய்யப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்