கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்த்கேம்ப் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இதன் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை பல இடங்களில் விரிசல்களுடன் காணப்படுகிறது. அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதனை இடித்து விட்டு புதிதாக கட்ட பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அருகில் செல்லவே பயணிகள் அச்சப்படுகிறார்கள். எனவே விரைவில் பழைய நிழற்குடையை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும்.