ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் ஆங்காங்கே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?