ஈரோடு கனிராவுத்தர் குளம்-வில்லரசம்பட்டி ரோட்டில் உள்ள வேலன் நகர் பிரிவில் குடிநீர் குழாய் போடுவதற்காக தோண்டப்பட்ட குழி 6 மாதங்கள் ஆகியும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.