கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து தின்றும், சிதறடித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் குரங்குகளை விரட்ட முயன்றால், தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி வருகிறார்கள். எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் குரங்குகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.