புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2025-06-15 16:48 GMT

சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி படுகைக்காடு ரோட்டில் கட்டப்பட்ட ஆண்கள் சுகாதார வளாகம் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை சுத்தப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

, .

மேலும் செய்திகள்

மயான வசதி