விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இவை அப்பகுதியில் உள்ள குப்பைகளில் மேய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.