மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2025-06-15 11:50 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த சுகாதார நிலையத்தில் முறையான மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்