கோத்தகிரியில் தாசில்தார் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் பழைய அரசு வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அவை பயனற்ற நிலையில் பல ஆண்டுகள் ஆகியும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் தேவையற்ற இடையூறுதான் நிலவுகிறது. எனவே அந்த வாகனங்களை மீண்டும் பயன்படுத்தவோ அல்லது அங்கிருந்து அகற்றவோ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.