சிறுத்தை உலா

Update: 2025-06-15 11:35 GMT

கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை உலா வருகிறது. அது பகல் நேரத்தில் பள்ளி வளாகத்தில் உள்ள புதரில் மறைந்து இருக்கவும், மாணவர்களை தாக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி வனத்துறையினர் உரிய முறையில் கண்காணித்து சிறுத்தையை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்