பாலம் அமைக்கப்படுமா?

Update: 2025-06-15 08:03 GMT

அகஸ்தீஸ்வரம் தாலுகா ‌நல்லூர் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கூனம்பாறை பகுதி உப்பாறு பாய்கிறது. இந்த ஆற்றின் தெற்கு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், விவசாயத்துக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்கோ, விளைந்த பொருட்களை கொண்டு வருவதற்கோ பாலம் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் விளை பொருட்களை சுமந்தபடி ஆற்றில் இறங்கி கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் நலன்கருதி ஆற்றின் குறுக்கே சிறு பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.‌‌

-கேசவன்,‌ வழுக்கம்பாறை.

மேலும் செய்திகள்

மயான வசதி